Sunday, August 8, 2010

கிருபையில் வளருங்கள்...

             2 பேதுரு 3 : 18 - ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டும். கிருபையில் வளர வேண்டுமானால் முதலாவது அவர் நமக்கு கொடுத்த வேத வசனத்தில் நாட்டம் காட்டவேண்டும். ஏனென்றால் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முதல் காரணமாக இருப்பது " தேவ வசனம் " ஆகும்.


நெகேமியா 8 :1 - ஒருமனப்பாடோடே இருந்த ஒருசில ஊழியர்கள்.
           இங்கே எழுப்புதல் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய வசனம் நமக்கு தேவை.
எஸ்றா 7 :6 - இங்கே எஸ்றா தேவவசனத்தில் (மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தில் ) தேறினவனாக காணப்பட்டான்.
எஸ்றா 7 :10 - வசனத்தை ஆராய்ந்து, அதின்படி செய்து, அதை உபதேசித்தான்.


இப்பொழுது 8 - ஆம் அதிகாரத்தில் எஸ்றா வேத வசனத்தை கொண்டு செய்த மகத்தான காரியத்தை அறிந்துகொள்ளலாம்.

1. Knowledge of God's Word:- ( எஸ்றா 8 : 1 -8 ) 
  •    எஸ்றா 8 : 2 ,3 - எல்லாருக்கும் முன்பாக வேத வசனத்தை கொண்டுவந்தான்...
நாம் தேவாலயத்துக்கு போகும்போது வேதாகமத்தை எப்படி கொண்டுசெல்கிறோம்?
    நாம் இன்று வேதாகமத்தை ஒரு நல்ல அழகான Hand Bag -ல் கொண்டுசெல்கிறோம். யாரும் பார்க்ககூடாது என்பற்காகவா? இல்லை நான் கிறிஸ்தவன் என்று மற்றவர்கள் அறிந்துகொள்வார்கள் என்பற்காகவா? நம்மை நாமே சிந்தித்து பார்ப்போம். அனால் மழை வரும் காலங்களில் நனையகூடாது என்று அப்படி எடுத்து செல்வீர்கள் என்றால், அது தவறல்ல.
  • எஸ்றா 8 : 4 -  பிரசங்க பீடத்தின்மேல் ஏறினான். 
   நாம் நம்முடைய சபைகளில் எப்படி காணப்படுகிறோம்? நாம் இன்று எத்தனைபேர் தைரியமாய் பிரசங்க பீடத்தின்மேல் நிற்கிறோம்? தைரியமாய் பிரசங்க பீடத்தின்மேல் நிற்க வேண்டுமானால் முதலாவது நாம் வசனத்தை ஆராய்ந்து, அதின்படி செய்கிறவர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் எஸ்றாவும் அப்படியே  வசனத்தை ஆராய்ந்து, அதின்படி செய்து, அதை உபதேசிக்கிறவனாக காணப்பட்டான். (எஸ்றா 7 :10 ). 
  • எஸ்றா 8 :5 - உயர நின்று எல்லாரும் காணும்படி திறந்தான்.
       இங்கே எஸ்றா  தைரியமாய் பிரசங்க பீடத்தின்மேல் நின்றதுமல்லாமல், எல்லாரும் காணும்படி வேதத்தை  திறந்து படித்தான். இன்று நாம் கர்த்தருடைய வசனம் கொடுக்கப்படும்போது நாம் வேதத்தை திறந்து அந்த வசனத்தை வாசிக்கிறோமா? சிந்தித்துபார்ப்போம்...
  • எஸ்றா 8 :6 - தேவனை ஸ்தோத்தரித்தான்.
      எல்லாரும் காணும்படி வேதத்தை திறந்து படித்து, பின்பு தேவனை ஸ்தோத்தரித்தான். நாமக்கும் தேவன் நம் சொந்த மொழியிலே வேதத்தை தந்திருக்கிறார். அதற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறோமா? 
  • எஸ்றா 8 :6  - ஜனங்கள் ஆமென் என்று சொன்னார்கள்.
      இங்கே எஸ்ராவினுடைய வார்த்தையே கேட்ட ஜனங்கள் ஆமென் என்று  சொன்னார்கள். நாமும் கேட்கிறவர்கள் ஆமென் என்று சொல்லத்தக்க நிலையில் கர்த்தருடைய வசனத்தை எஸ்ராவைபோல் மற்றவர்களுக்கு சொல்லுவோமா?
  •  எஸ்றா 8 :7,8 - விளக்கமாய் விவரித்து சொன்னான். 
    நாமும் கர்த்தருடைய வசனத்தை  மற்றவர்களுக்குசொல்லும்போது ஏனோ தானோ என்று சொல்லாமல் ஆவியானவரின் ஏவுதலின்படி விளக்கமாய் விவரித்து சொல்லி தேவனை மகிமைப்படுத்துவோமா?

2. Emotional Effort of God's Word:-  ( எஸ்றா 8 : 9 - 12 )  ( அழுதார்கள் & சந்தோஷப்பட்டார்கள் ).
  • எஸ்றா 8 : 9 -  ஜனங்கள் அழுதார்கள்.
     நியாயப்பிரமாணத்தைக் கேட்டபோது  அழுதார்கள். இது பாவ உணர்வை கொடுக்கக்கூடியது. தேவனுக்கு நேராக நடக்க உதவுகிறது. நாம் இன்று வசனத்தை போதிக்கும்போது எப்படி போதிக்கிறோம்? பாவ உணர்வடையும்படியாக வசனத்தை பேசுகிறோமா இல்லை நம் சொந்த கதைகளை பேசுகிறோமா? சிந்தித்து பார்த்து வசனத்தை போதிப்போம்.
  • எஸ்றா 8 : 12 - ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்.
     எதிகால நம்பிக்கையை குறித்து சந்தோஷப்பட்டார்கள். இந்த வசனத்தை கேட்டவர்கள் அழுது பாவ உணர்வடைந்துமல்லாமல், தேவன் அவர்களுக்கு கொடுத்த எதிகால நம்பிக்கைகாக சந்தோஷப்பட்டார்கள். நம்மால் போதிக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையில் சந்தோஷப்படுகிறார்களா?

3. Emotional Effect of God's Word:-  ( எஸ்றா 8 : 18 - 36  )
 
     சில காரியங்கள் செய்யாதபடி சந்தோசப்பட்டார்கள். சில காரியங்கள் செய்தார்கள். நாமும் இவர்களைப்போல செய்யவேண்டிய காரியங்களை செய்வோமா? அதாவது விட்டுவிட வேண்டிய காரியங்களை விட்டுவிட்டு  பற்றிக்கொள்ளவேண்டிய காரியங்களை பற்றிகொல்வோமா?...
   
CONCLUSION: 


                    ஒரு விசுவாசி தேவனுடைய கிருபையில் வளர வேண்டுமானால் நாம் எஸ்ராவைபோல் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருடைய கிருபையில் இன்னும் அதிகமாய் வளருவோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

 - சகோ. M.K.சன்னி ( தேவ ஊழியர் ),
அந்தமான் நிக்கோபார்.
(இந்த செய்தி  மே மாதம் குற்றாலம் முகாமில் சகோதரர் கொடுத்தது.) 
 





 



1 comment:

  1. Dear Brother,
    greetings in the name of our lord Jesus.i read your sunday sermons in tamil. its very nice.more useful for my spiritual life.thankyou.

    ReplyDelete